தேசிய அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 27 பதக்கம் வென்ற தமிழக அணி 5-ம் இடத்தைப் பிடித்தது.
இப்போட்டிகள் பெங்களூரில் நடைபெற்றது. இதில் தமிழகம், ஹரியானா, ஆந்திரம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த 340 மாற்றுத்திறன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து ஆண்கள் பிரிவில் 24 பேர், பெண்கள் பிரிவில் 15 பேர் என மொத்தம் 39 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், பயிற்சியாளர் எம்.விஜயகுமார் 20 நாள்கள் பயிற்சி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து பெங்களூரில் நடைபெற்ற 13-வது தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். 176 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்துக்கு தனி நபர் பிரிவில் 26, தொடர் போட்டியில் ஒன்று என மொத்தம் 27 பதக்கங்கள் கிடைத்தன. பதக்கம் வென்ற அணியினர் வியாழக்கிழமை தமிழகம் வந்தனர். அவர்களுக்கு விளையாட்டுத் துறை சார்பிலோ, போட்டிக்கான பயிற்சி முகாம் நடத்திய புதுவாழ்வு திட்டத் துறை சார்பிலோ வரவேற்பு அளிக்கப்படவில்லை என்பது பாராலிம்பிக் வீரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment